செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “பெண் சருமம்” (woman’s skin) எனும் பிரிவில் போலீஷ் கவிஞரான அன்னா ஸ்விர்ரின் (1909 – 1984) “அவளுக்கு ஞாபகம் இல்லை” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது.
“பாவச் செயல்களை மனிதர்கள் கடக்கக்கூடிய பருவங்களாக எண்ணும் வில்லியம் பிளேக், அவற்றை உறுதியான இருப்பாக கருதவில்லை. அதே போன்ற கருணையும் மன்னிப்பும் அன்னா ஸ்விர்ரின் இந்த கவிதையிலும் உள்ளது” – செஸ்லா மிலோஷ்
அவளுக்கு ஞாபகம் இல்லை
அவள் ஒரு கொடுமைக்காரச் சித்தியாக இருந்தவள்
இப்போது முதிய வயதில் மெல்ல இறப்பு நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறாள்
ஒரு சிறிய குடிலில் வசித்தபடி.
எரிந்த காகிதம் போல்
அவள் நடுங்கிக் கொண்டிருக்கிறாள்
கொடுமைக்காரியாக இருந்தது அவளுக்கு ஞாபகம் இல்லை
ஆனால் குளிராக இருப்பது மட்டும்
தெரிகிறது
No comments:
Post a Comment