(தன் "கிறிஸ்துவின் இறுதி சபலம்" நாவலுக்கு நீகாஸ் கசந்த்சாகீஸ் எழுதிய முன்னுரை)
கிறிஸ்துவின் இரட்டை இயல்பானது எப்போதுமே எனக்கு புரிந்துகொள்ள முடியாத மர்மமாகவே இருந்துள்ளது. கடவுளை அடைவதற்கான அல்லது கடவுளிடம் திரும்பி அவரோடு தன்னை அடையாளப்படுத்துவதற்கான மனிதனின் ஏக்கம் என்பது அடிப்படையான மானுட இயல்பாகவும் அதே நேரம் அதிமானுட அம்சத்துடனும் இருக்கிறது. கடவுளுக்கான நினைவேக்கத்தினை ஒரே சமயத்தில் மர்மமானதாகவும் வெளிப்படையானதாகவும் அறிகிறேன். அது என்னில் பெரிய காயங்களையும் பெருக்கெடுத்து பாயும் வசந்தங்களையும் திறக்கிறது.
இளமையிலிருந்தே என் ஆத்துமாவிற்கும் மாமிசத்திற்கும் நடுவே கருணையற்ற யுத்தம் இடைவிடாமல் நடக்கிறது. அந்த போராட்டமே என் ஆதார வேதனையாகவும், என் மகிழ்ச்சிகளுக்கும் துயரங்களுக்குமான தோற்றுவாயாகவும் இருக்கிறது.