Thursday 29 June 2023

"அகழ்" இதழும் என் புதிய சிறுகதை நூலும்

 “அகழ்” ஜூன் இதழில் வெளியான கவிஞர் சுகுமாரனின் நேர்காணல் மிக பரவலாக வாசிக்கப்பட்டு வருகிறது. அந்த நேர்காணலை மேற்கொள்ளும்போதே அது சூழலில் கவனிக்கப்பட்டு வரவேற்பை பெறும் என்பது தெரியும். ஆனால் இவ்வளவு தூரம் வாசிக்கப்படும் என்று எண்ணியிருக்கவில்லை. சுகுமாரனுடைய வாசகர்கள் பலரும் அவரை இன்னும் அணுக்கமாக அறிய முடிந்ததாக குறிப்பிட்டிருந்தார்கள். எழுத்தாளனை மேலும் நெருக்கமாக அறியவும் அவன் கருத்துக்களுக்கு செவி மடுக்கவும் இவ்வளவு பேர் இருப்பது நம்பிக்கையளிக்கிறது. நேர்காணலை பாராட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. சுகுமாரனே போனில் அழைத்திருந்தார். “நான் பாட்டுக்கு சிவனேன்னு இருந்தேன். நீங்க ஒரு பேட்டி எடுத்திட்டு, காலையில இருந்து போனை கீழே வைக்க முடியல” என்றார். நிறைவாக இருந்தது.