Saturday 29 January 2022

ஒளி மின்னும் பொருட்கள் 6 – பெருங்கால்வாயின் வழியே (ஷின் க்வான்)

 செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “பயணம்” எனும் பிரிவில் சீனக் கவிஞரான ஷின் க்வானின் (1049 – 1101) “பெருங்கால்வாயின் வழியே” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது. 

“நீர் வழி பயணமானது மற்ற வகை பயணங்களைவிட காலத்தால் மூத்தது. எனவே, கப்பல் பயணத்திற்கு கவிதையில் முக்கியமான இடம் இருக்கிறது. நதிகளுக்கும் கால்வாய்களுக்கும் சீனாவில் உள்ள முக்கியத்துவத்துக்கு சாட்சியாக சீன கவிதையிலும் கப்பல் பயணம் இடம்பெற்றுள்ளது” -செஸ்லா மிலோஷ்

பெருங்கால்வாயின் வழியே

என் சிறிய படகின்
மேற்தளத்தில்
பனித் தூவல்கள் உறைந்திருக்கின்றன
தண்ணீர்
தெளிந்தும் அசைவற்றும் இருக்கிறது
எண்ணிலடங்கா குளிர் நட்சத்திரங்கள்
படகுடன் நீந்தி வருகின்றன
அடர்த்தியான நாணற் புதர் கரையை மறைத்திருக்கிறது
பூமியினையே கடந்துவிட்டதாக நீங்கள் நினைக்கக்கூடும்
அப்போது திடீரென்று கேட்கத் தொடங்குகின்றன
சிரிப்பும் பாடலும்


No comments:

Post a Comment